Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பஸ் மீது ஜீப் மோதல் நால்வர் பரிதாப பலி

பஸ் மீது ஜீப் மோதல் நால்வர் பரிதாப பலி

பஸ் மீது ஜீப் மோதல் நால்வர் பரிதாப பலி


ADDED : ஏப் 11, 2025 11:10 PM

Follow on Google

ADDED : ஏப் 11, 2025 11:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

யாத்கிர்: மத்தரகி கிராமத்தின் அருகில், தேசிய நெடுஞ்சாலையில், இரண்டு வாகனங்கள் மோதி கொண்டதில், நால்வர் உயிரிழந்தனர்.

யாத்கிர் மாவட்டம், ஷஹாபுரா தாலுகாவின், வர்க்கனஹள்ளி கிராமத்தை சேர்ந்த பலர், கலபுரகியின் பத்தரகி கிராமத்தில் உள்ள பாக்யவந்தி கோவிலுக்கு, நேற்று காலை 'பொலிரோ' ஜீப்பில் புறப்பட்டனர்.

ஷஹாபுராவின், மத்தரகி அருகில் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் போது, கட்டுப்பாட்டை இழந்த பொலிரோ ஜீப், அரசு பஸ் மீது மோதியது.

பொலீரோ வாகனத்தில் இருந்த சரணப்பா, 30, சுனிதா, 19, சோமவ்வா, 50, தங்கம்மா, 55, ஆகியோர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

தகவலறிந்து அங்கு வந்த பீமராயனகுடி போலீசார், இறந்தவர்களின் உடல்களை மீட்டனர். காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap