/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ உடல் பரிசோதனை செய்யாத பெண் 3 குழந்தைகள் உயிரிழந்த பரிதாபம் உடல் பரிசோதனை செய்யாத பெண் 3 குழந்தைகள் உயிரிழந்த பரிதாபம்
உடல் பரிசோதனை செய்யாத பெண் 3 குழந்தைகள் உயிரிழந்த பரிதாபம்
உடல் பரிசோதனை செய்யாத பெண் 3 குழந்தைகள் உயிரிழந்த பரிதாபம்
உடல் பரிசோதனை செய்யாத பெண் 3 குழந்தைகள் உயிரிழந்த பரிதாபம்
ADDED : செப் 24, 2025 05:52 AM
ஜிகனி : கர்ப்பம் ஆனதில் இருந்து, உடல் பரிசோதனை செய்து கொள்ளாமல் தாய் அலட்சியம் காட்டியதால், பிறந்த சிறிது நேரத்தில் மூன்று குழந்தைகள் இறந்த அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது.
பெங்களூரு, ஆனேக்கல் பன்னர்கட்டாவை சேர்ந்தவர்கள் ஆனந்த், 30, மஞ்சுளா, 28. இவர்கள் இருவரும் காதலித்தனர். பெற்றோர் எதிர்ப்பால் வீட்டைவிட்டு வெளியேறி, கடந்த ஆண்டு கோவிலில் திருமணம் செய்தனர். பின், மனைவியுடன் தனது சகோதரர் வீட்டில் ஆனந்த் வசித்தார்.
சகோதரர் உடன் ஏற்பட்ட தகராறில், ஆனந்த், மனைவியை அழைத்து கொண்டு ஜிகனி அருகே கொல்லஹள்ளி பகுதிக்கு சென்று வசித்தார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மஞ்சுளா கர்ப்பம் அடைந்தார்.
பணம் இல்லாததால், மருத்துவமனைக்கு சென்று உடல் பரிசோதனை செய்யாமல் இருந்தார். இதுபற்றி அறிந்த ஆஷா ஊழியர்கள், மஞ்சுளாவுக்கு உதவ முன்வந்தனர். ஆனாலும், மருத்துவமனைக்கு செல்வதில் மஞ்சுளா அலட்சியம் காட்டினார்.
இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டது. அவரை, அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
பிரசவத்தில் முதலில் ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், சிறிது நேரத்தில் குழந்தை இறந்தது.
மஞ்சுளாவின் வயிற்றில் மேலும் இரு பெண் குழந்தைகள் இருந்தன. அந்த குழந்தைகளும் வெளியே எடுக்கப்பட்ட, சிறிது நேரத்தில் இறந்தன.
கர்ப்பம் ஆனதில் இருந்து, உடல் பரிசோதனை செய்து கொள்ளாமல் அலட்சியம் காட்டியதால், மூன்று குழந்தைகளும் இறந்தது தெரிந்து உள்ளது. மஞ்சுளாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.