Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/மகன் கொலை

மகன் கொலை

மகன் கொலை

மகன் கொலை

ADDED : ஜூன் 13, 2025 07:00 AM


Google News
சிக்கபல்லாபூர்:

மாரடைப்பால் தாய் உயிரிழப்பு



சிக்கபல்லாபூரின் கொரேனஹள்ளி கிராமத்தில் வசித்தவர் நவீன், 30. இவரது குடும்பத்தினருக்கும், அதே கிராமத்தில் வசிக்கும் பங்காளியான சிவண்ணா என்ற சிவசங்கர ரெட்டியின் குடும்பத்தினருக்கும் இடையே நிலத்தகராறு இருந்தது. பல முறை அடிதடியும் நடந்துள்ளது.

வழக்கம் போன்று நேற்று முன் தினம் இரவு, கூட்டாளிகளுடன் நவீன் வீட்டுக்கு வந்த சிவசங்கர ரெட்டி, நவீனுடன் சண்டை போட்டு, அவரை கண்மூடித்தனமாக தாக்கினர். பலத்த காயமடைந்த நவீன், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மகன் அடித்துக் கொல்லப்பட்டதை கண்ட அதிர்ச்சியில் நவீனின் தாய் யசோதம்மா, 65, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இதுதொடர்பாக, சிவசங்கர ரெட்டியை பேரசந்திரா போலீசார் கைது செய்தனர்.

மாரடைப்பால் தாய் உயிரிழப்பு







      Our Apps Available On




      Dinamalar

      Follow us