சொகுசு ஆபீஸ் எதுக்கு?
மு னிசி.,யின் அதிகாரம் யாரிடம் உள்ளது என்பதே கேள்விக்குறியாக உள்ளது. நகரின் முதல் குடிமகன் என்ற தகுதியுள்ளவர் முனிசி.,யின் தலைவர். அவர் எங்கே; என்ன செய்து கொண்டிருக்கிறார். அவர் ஆப்சென்ட் என்றால், துணைத் தலைவர் அதிகாரத்தை காண்பிக்க வேண்டாமா. இவர்கள் இருவருமே கட்டாய ஓய்வு பெற்று விட்டார்களா. தலைவரும், துணைத் தலைவரும் பதவியில் இருந்தும், இல்லாமல் இருப்பதற்கு சொகுசான ஆபீஸ் எதுக்கு.
டுபாக்கூர் பயணம்!
த ங்கமான நகரில் இருந்து தேசிய தலைநகருக்கு ஒரு மருத்துவரை அழைத்து சென்று உள்ளனர். கம்பெனி மருத்துவமனையை அவருக்கே வாங்கித்தருவதாக உசுப்பேத்தி மயக்கி அழைத்துப் போனாங்களாம்.
இருந்ததை இழக்கலாமா?
பே த்தமங்களா ஏரிக்கரையில், 120 ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்தப்பட்ட சுத்திகரிப்பு ஆலையின் பெயர் 'கே.ஜி.எப்., வாட்டர் ஒர்க்ஸ்' என்றே இருந்து வந்தது. தற்போது, கர்நாடக குடிநீர் வழங்கல் வாரியம்னு பெயரை மாற்றியிருக்காங்க.
விமோசனம் எப்போது?
கோ ல்டு சிட்டியின் மையப்பகுதியான உரிகம் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதாக 25 ஆண்டா, பல சர்வே பணிகள் நடத்தினதை தான் பார்க்க முடிந்ததே தவிர, ஆக்கப்பூர்வ வேலையை இன்னும் துவக்கவே இல்லை. இதுக்கு இடைஞ்சலா இருக்கிற கட்டடங்களை இடித்து தள்ளுவதா எச்சரிக்கை செய்வதும், பின்னர் ஆபீசர் மாற்றம், மந்திரி, எம்.பி., - எம்.எல்.ஏ., மாற்றம், கான்ட்ராக்டர் ஓட்டம்னு கதை அளப்பது தான் நடந்து வருது. மேம்பாலம் அமையும் என கனவு தான் காணணும் போல.


