ADDED : அக் 08, 2025 09:05 AM

தங்கவயல் : ராபர்ட்சன்பேட்டை நீதிமன்றம் அருகில் உள்ள மினி விதான் சவுதா அரங்கில் மகாகவி வால்மீகி ஜெயந்தி, அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா தலைமை வகித்தார். அவர் பேசுகையில், ''இதிகாச ராமாயணத்தை உருவாக்கி, மனித பிறவிகளுக்கு நல்வழி காட்டும் போதனைகளை வழங்கியவர் ஆதி கவி வால்மீகி. அவரது ஜெயந்தி விழா உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. அவரை பூஜிக்கும் விழாவாக அமைந்துள்ளது,'' என்றார்.
தாசில்தார் பாரத், நகராட்சி ஆணையர் ஆஞ்சநேயலு உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர். வால்மீகி படத்திற்கு மலர் துாவி வணங்கினர்.


