கோவையில் அசுர வேகத்தில் IT வளர்ச்சி! IT நிறுவனங்களின் சொர்க்கமாக கோவை மாற பிரதான 6 காரணங்கள்!
கோவையில் அசுர வேகத்தில் IT வளர்ச்சி! IT நிறுவனங்களின் சொர்க்கமாக கோவை மாற பிரதான 6 காரணங்கள்!
கோவையில் அசுர வேகத்தில் IT வளர்ச்சி! IT நிறுவனங்களின் சொர்க்கமாக கோவை மாற பிரதான 6 காரணங்கள்!

*கோவையில் ஐடி துறை வளர காரணம்*
சென்னையில் ஐடி துறை கால்பதித்தது முதலே, கோவையிலும் ஐடி நிறுவனங்கள் வர தொடங்கின. 2005ல் காக்னிசன்ட் தன்னுடைய முதல் நிறுவனத்தை கோவையில் நிறுவியது. அதன் பிறகே அடுத்தடுத்து ஐடி நிறுவனங்கள் கோவையை நோக்கி நகர ஆரம்பித்தன.
*முதல் காரணம் - நில வசதி*
ஐடி பூங்காக்கள் அமைக்க 1,00,000 சதுர அடி அளவில் நிலங்கள் தேவை உள்ளது. சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி போன்ற நகரங்களில் இவ்வளவு பெரிய இடங்களை தேர்ந்தெடுப்பது சுலபம் இல்லை.

*இரண்டாவது காரணம் - உள்கட்டமைப்பு*
கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நகரமே மேலும் அழகாக மாறி வருகிறது. கோவை- அவினாசி மேம்பாலம் 10 கிமீ தூரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் மக்கள் பயன்பாடுக்கும் வரவுள்ளது. இதனால் போக்குவரத்து வசதி எளிமையாக்கப்படுகிறது. கூட்ட நெரிசலை சமாளிக்கும் அளவுக்கு கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படுவது கூடுதல் பலம் சேர்க்கிறது.
*மூன்றாவது காரணம் - பருவநிலை*
மேற்கு தொடர்ச்சி மலையோரம் அமைந்துள்ள கோவையில் இயற்கை பேரிடர்கள் ஏற்படும் வாய்ப்புகள் பெரிதாக இல்லை.
*நான்காவது காரணம் - கல்லூரிகள்*
மனித வளமே ஐடி துறையின் முதுகெலும்பு. இங்குள்ள முன்னணி கல்லூரிகளில் இருந்து வெளிவரும் பட்டதாரிகள் வெவ்வேறு ஊருக்கு சென்று வேலை தேட வேண்டிய அவசியம் இனி இருக்காது. சொந்த ஊரிலேயே வேலை கிடைக்கும் வாய்ப்பை இந்த ஐடி நிறுவனங்கள் ஏற்படுத்தி இருக்கிறது.
*ஐந்தாவது காரணம் - பொழுதுபோக்கு*
அவினாசி சாலையை கடந்து செல்லும் போதே கோவை எவ்வளவு வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை அறிய முடியும். ஒரு நாள் பயணமாகவே ஊட்டி, வால்பாறை, ஆழியாறு, கோவை குற்றலாம் போன்ற இடங்களுக்கு சென்று விடலாம். ஆன்மிக பக்கம் போக விரும்புவோருக்கு ஆழியாறில் வேதாந்திரி மகரிஷி, ஈஷா யோகா மையம் உள்ளன. பொழுதுபோக்குக்கு பஞ்சமில்லா இடமாகவும் கோவை இருக்கிறது.
*ஆறாவது காரணம் - மருத்துவமனைகள்*
சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் தான் ஏராளாமான மருத்துவமனைகள் உள்ளன. பல்வேறு நகரங்களில் இருந்தும் சிகிச்சைக்கு மக்கள் இங்கு வருகின்றன.


