Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/வர்த்தகம்/பொது/ கோவை புத்தொழில் மாநாடு துணை நிகழ்வு நடத்த அழைப்பு

கோவை புத்தொழில் மாநாடு துணை நிகழ்வு நடத்த அழைப்பு

கோவை புத்தொழில் மாநாடு துணை நிகழ்வு நடத்த அழைப்பு

கோவை புத்தொழில் மாநாடு துணை நிகழ்வு நடத்த அழைப்பு

ADDED : அக் 04, 2025 12:09 AM


Google News
Latest Tamil News
சென்னை:கோவை உலக புத்தொழில் மாநாட்டில், தொழில் அமைப்புகள், நிறுவனங்கள் 50க்கும் மேற்பட்ட துணை நிகழ்வுகளை நடத்தி, தொழில்துறையினரை பங்கேற்கச் செய்யலாம் என, டி.என். ஸ்டார்ட் அப் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.

'டி.என்., ஸ்டார்ட் அப்' தரப்பில் கூறியதாவது:

மாநாட்டில் ஏராளமான தொழில் நிபுணர்கள், முதலீட்டு நிறுவனங்கள், ஜி.சி.சி., மற்றும் தொழில் வளர் மையங்களின் (இன்குபேஷன் சென்டர்) பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

உதாரணத்துக்கு, பிரிட்டனில் இருந்து 20 பேர் கொண்ட வர்த்தக குழு வருகிறது. இதுபோன்று, 5 முதல் 22 பேர் கொண்ட குழுவினர், வெவ்வேறு நாடுகளில் இருந்து வருகின்றனர். சர்வதேச அளவிலான மாநாடுகளில், மாநாடு தவிர்த்து, சந்திப்புகள், உரையாடல்கள் போன்ற துணை நிகழ்வுகள் நடக்கும்.

அது போல், கோவையிலும் நடத்தலாம். டி.என். ஸ்டார்ட் அப் நிறுவனம் அதற்கு துணையாக இருக்கும்.

இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us