கோடீஸ்வர குடும்பங்கள் இந்தியாவில் அதிகரிப்பு
கோடீஸ்வர குடும்பங்கள் இந்தியாவில் அதிகரிப்பு
கோடீஸ்வர குடும்பங்கள் இந்தியாவில் அதிகரிப்பு
UPDATED : செப் 19, 2025 01:17 AM
ADDED : செப் 19, 2025 01:16 AM

புதுடில்லி:இந்தியாவில், 8.50 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்து மதிப்பு கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கை கடந்த நான்கு ஆண்டுகளில் 90 சதவீதம் அதிகரித்துள்ளதாக 'மெர்சிடிஸ் பென்ஸ் ஹுருண் இந்தியா' சொத்து அறிக்கை 2025ல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக மஹாராஷ்டிரா மாநிலத்தில் 1.78 லட்சம் கோடீஸ்வரர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]() |
அறிக்கையின் முக்கிய விபரங்கள்
8.50 கோடி ரூபாய்க்கு அதிகமான சொத்து மதிப்புள்ள குடும்பங்கள்
2021 4.58 லட்சம் குடும்பங்கள்
2025 8.71 லட்சம் குடும்பங்கள்
வளர்ச்சி 90%
![]() |
அதிக கோடீஸ்வரர்களை கொண்டுள்ள நகரங்கள்
மும்பை 1,42,000
டில்லி 68,200
பெங்களூரு 31,600
அதிகம் முதலீடு
பங்குச் சந்தை
ரியல் எஸ்டேட்
தங்கம்
அதிகம் விரும்பப்படும் பிராண்டுகள்
ரோலக்ஸ்
தனிஷ்க்
எமிரேட்ஸ்
எச்.டி.எப்.சி., வங்கி
சர்வதேச அளவில் பொருளாதார நிச்சயமற்ற தன்மை நிலவும்போதிலும், இந்தியாவில் வலுவாக சொத்து உருவாக்கம் நடைபெற்று வருகிறது.
அனஸ் ரஹ்மான் ஜுனைத்,
நிறுவனர், ஹுருன் இந்தியா