ADDED : மே 02, 2026 12:39 AM

பங்கு சந்தைக்கு வரும் இரண்டு புதிய நிறுவனங்கள் ஐ.பி.ஓ., வெளியிட செபி அனுமதி.
* 'ஹிந்துஸ்தான் லேபரட்டரீஸ்' மற்றும் 'ஆர்.கே., ஸ்டீல் மேனுபேக்சரிங்' ஆகிய இரண்டு நிறுவனங்களும் ஐ.பி.ஓ., வெளியிட செபி அனுமதித்துள்ளது.
மருந்து உற்பத்தியில் ஈடுபட்டு வரும், 'ஹிந்துஸ்தான் லேபரட்டரீஸ்' நிறுவனம், 50 லட்சம் புதிய பங்குகளையும், ஒ.எப்.எஸ்., முறையில், 91 லட்சம் பங்குகளையும் விற்பனை செய்ய உள்ளது.
இதன் வாயிலாக கிடைக்கும் நிதி, நிறுவனத்தின் அன்றாட செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி பணி களுக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
*ஸ்டீல் குழாய்கள் மற்றும் பைப் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள, 'ஆர்.கே., ஸ்டீல் மேனுபேக்சரிங்' நிறுவனம், 2 கோடி புதிய பங்குகளை வெளியிட உள்ளது.
இதன்வாயிலாக திரட்டப்படும் நிதியை கொண்டு கடன்களை திருப்பி செலுத்தவும், தொழில் விரிவாக்கத்திற்கும் பயன்படுத்த நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த இரண்டு நிறுவனங்களின் பங்குகளும், என்.எஸ்.இ., மற்றும் பி.எஸ்.இ.,யில் பட்டியலிடப்படும் அதிகாரப்பூர்வ தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.





