
ஏற்றத்துடன் முடிவடைந்த சந்தைகள்
வாரத்தின் கடைசி வர்த்தக நாளான நேற்று, நிப்டி, சென்செக்ஸ் ஏற்றத்துடன் நிறைவு செய்தன. உலகளாவிய பங்குச்சந்தை களின் தொடர்ச்சியாக, நேற்று வர்த்தகம் துவங்கிய போது, இந்திய சந்தை குறியீடுகள் உயர்வுடன் துவங்கின.
உலக சந்தைகள்
வியாழனன்று அமெரிக்க சந்தைகள் உயர்வுடன் முடிவடைந்தன. ஆசிய சந்தைகளை பொறுத்தவரை, ஜப்பானின் நிக்கி, சீனாவின் ஷாங்காய்எஸ்.எஸ்.இ., குறியீடுகள் உயர்வுடனும்; தென்கொரியாவின் கோஸ்பி,ஹாங்காங்கின் ஹேங்சேங் குறியீடுகள் சரிவுடனும் முடிவடைந்தன.ஐரோப்பிய சந்தைகள் இறக்கத்துடன் வர்த்தகமாகின.
உயர்வுக்கு காரணங்கள்
1உலகளாவிய சந்தைகளில் நிலவிய சாதகமான சூழல்
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் 760 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று விற்று இருந்தனர்.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 1.03 சதவீதம் குறைந்து, 68.03 அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 15 பைசா அதிகரித்து, 85.40 ரூபாயாக இருந்தது.