Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ நீட் தேர்வு முறைகேடு; பார்லி.,யில் குரல் எழுப்புவேன்: என்கிறார் ராகுல்

நீட் தேர்வு முறைகேடு; பார்லி.,யில் குரல் எழுப்புவேன்: என்கிறார் ராகுல்

நீட் தேர்வு முறைகேடு; பார்லி.,யில் குரல் எழுப்புவேன்: என்கிறார் ராகுல்

நீட் தேர்வு முறைகேடு; பார்லி.,யில் குரல் எழுப்புவேன்: என்கிறார் ராகுல்

ADDED : ஜூன் 09, 2024 11:52 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: ''நீட் தேர்வு முறைகேடு குறித்து பார்லி.,யில் குரல் எழுப்புவேன். இண்டியா கூட்டணி மீது இளம் வாக்காளர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்'' என காங்கிரஸ் எம்.பி ராகுல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் ராகுல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீட் தேர்வு முறைகேடு குறித்து பார்லி.,யில் குரல் எழுப்புவேன். இண்டியா கூட்டணி மீது இளம் வாக்காளர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்கள் குரல் ஒடுக்கப்படுவதை ஏற்கமாட்டோம்.

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தததை அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதால், 24 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்களையும், அவர்களது குடும்பத்தையும் பாதிப்பிற்குள்ளாக்கி உள்ளது. ஒரே தேர்வு மையத்தை சேர்ந்த 6 மாணவர்கள் ஒரே மாதிரியான மதிப்பெண்களை பெறுவது சாத்தியமற்ற ஒன்று. இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us