பவித்ரா கவுடா தோழிக்கு 'சம்மன்' விசாரணைக்கு ஆஜராக உத்தரவு
பவித்ரா கவுடா தோழிக்கு 'சம்மன்' விசாரணைக்கு ஆஜராக உத்தரவு
பவித்ரா கவுடா தோழிக்கு 'சம்மன்' விசாரணைக்கு ஆஜராக உத்தரவு

ரூ.40 லட்சம் கடன்
இந்நிலையில், ரேணுகாசாமியை கொலை செய்த பின், பெங்களூரு மாநகராட்சி முன்னாள் துணை மேயர் மோகன்ராஜ் என்பவரிடமிருந்து 40 லட்சம் ரூபாயை தர்ஷன் கடனாக வாங்கியது தெரிந்தது.
இயக்குனர்
ரேணுகாசாமியை கொலை செய்த மறுநாள், டெவில் படப்பிடிப்பில் தர்ஷன் கலந்து கொண்டார். இதனால், அந்தப் படத்தின் இயக்குனர் மிலானா பிரகாஷ் என்பவருக்கும் விசாரணைக்கு ஆஜராக, போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். பசவேஸ்வரா நகரில் வசித்து வரும் மிலானா பிரகாஷ், நேற்று காலை பசவேஸ்வரா நகர் போலீஸ் நிலையத்திற்கு சென்றார்.
எம்.எல்.ஏ., ஆபீஸ்
இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள பவித்ராவை, அவரது நெருங்கிய தோழி சமதா என்பவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சந்தித்தார். அவர்கள் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு இருந்தன. இதையடுத்து, விசாரணைக்கு ஆஜராக சமதாவுக்கும், போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.