Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ இளம் மடாதிபதி  திடீர் மரணம் 

இளம் மடாதிபதி  திடீர் மரணம் 

இளம் மடாதிபதி  திடீர் மரணம் 

இளம் மடாதிபதி  திடீர் மரணம் 

ADDED : ஜூலை 09, 2024 04:49 AM


Google News
Latest Tamil News
கலபுரகி, : விரக்த மடத்தின் இளம் மடாதிபதி சித்தராம மஹா சுவாமி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

கலபுரகி கலகி ரத்தக்கல் கிராமத்தில் விரக்த மடம் உள்ளது. இங்கு சித்தராம மஹா சுவாமி, 35 என்பவர் மடாதிபதியாக இருந்தார். நேற்று காலை அவருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. மடத்தின் ஊழியர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது மாரடைப்பால் மரணம் அடைந்தது தெரிந்தது.

மடாதிபதி இறந்த தகவல் அறிந்ததும், கிராம மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். மடத்திற்கு திரண்டு சென்று மடாதிபதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். நேற்று மாலை 5:00 மணிக்கு சித்தராமமஹா சுவாமி உடல் அடக்கம் செய்யப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us