Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ஆபரேஷன் சிந்தூரில் 9 பாக்., போர் விமானங்கள் அழிப்பு!

ஆபரேஷன் சிந்தூரில் 9 பாக்., போர் விமானங்கள் அழிப்பு!

ஆபரேஷன் சிந்தூரில் 9 பாக்., போர் விமானங்கள் அழிப்பு!

ஆபரேஷன் சிந்தூரில் 9 பாக்., போர் விமானங்கள் அழிப்பு!

ADDED : ஜூன் 04, 2025 04:36 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி: இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில் பாகிஸ்தானின் 9 போர் விமானங்கள் அழிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

' ஆபரேஷன் சிந்தூர் ' நடவடிக்கை மூலம் பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட இழப்புகள் தொடர்பாக பல்வேறு புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், இந்தியாவின் தாக்குதலில் பாகிஸ்தான் விமானப்படையின் 6 போர் விமானங்கள், 2 கண்காணிப்பு போர் விமானங்கள், சி130 ஹெர்குலஸ் விமானம் மற்றும் 10 ஆயுதம் தாங்கிய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது தெரியவந்துள்ளது.

இந்தியாவின் தாக்குதல் காரணமாக பாகிஸ்தானின் வான்வெளி மற்றும் தரைவழி ராணுவ சொத்துகளுக்கு அதிக இழப்பு ஏற்பட்டு உள்ளது. வான்வெளி நடவடிக்கையின் போதே இந்த 6 போர் விமானங்களும் அழிக்கப்பட்டு உள்ளன. இந்தியா மீது தாக்குதல் நடத்த வந்த பாகிஸ்தான் போர் விமானங்கள், அந்நாட்டின் பஞ்சாப் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அழிக்கப்பட்டு உள்ளன. இவை அனைத்தும் இந்திய தரைவழி ஏவுகணை அமைப்புகள் மற்றும் வான்வெளி முன்னெச்சரிக்கை கருவிகளால் எடுக்கப்பட்ட ரேடார் கண்காணிப்பு மூலம் உறுதி செய்யப்பட்டு உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us