
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தீ விபத்து பாதுகாப்பு
பெங்களூரில் வாசனை திரவிய தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் சட்டசபையில் எதிரொலித்தது. எதிர்க்கட்சித் தலைவர் அசோக், உறுப்பினர் சோமசேகர் ஆகியோர், 'குடியிருப்பு பகுதிகளில் இதுபோன்று சட்ட விரோதமான தொழிற்சாலைகள் செயல்படுகிறது. பொதுமக்கள் அச்சத்தில் வசிக்கின்றனர்' என்றனர்.
கணக்காளர் பதவி
குந்தாபூர் எம்.எல்.ஏ., கிரண் குமார் கேள்விக்கு பதிலளித்து வருவாய் துறை அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா கூறுகையில், ''வருவாய் துறையில், 1,000 கிராம கணக்காளர் பதவியை நிரப்ப, விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும். இதில் அரசியல் எதுவும் இல்லை. குந்தாபூரில் வருவாய் துறையில் காலியாக இருந்த 110 இடங்களுக்கு, 70 இடங்கள் நிரப்பப்பட்டு உள்ளது. மற்ற பதவிகள் விரைவில் நிரப்பப்படும்,'' என்றார்.
ஒரு நிமிடம்... ஒரு நிமிடம்!
சட்டசபையில் போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி பேசுகையில், ''ஆளும் காங்கிரஸ் அரசு, அனைத்து தொகுதிகளுக்கும் நிதி வழங்கி உள்ளது. ஆனால் நாங்கள் எதிர்க்கட்சியில் இருந்தபோது, எங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை,'' என்றார்.
அமைச்சருக்கு அறிவுரை
சட்டசபையில் கேள்வி நேரத்தில், பா.ஜ., உறுப்பினர் பசனகவுடா பாட்டீல் எத்னால், 'எனது தொகுதியில் 1.20 லட்சம் சிறுபான்மையினர் உள்ளனர். ஆனால் எனக்கு பணம் விடுவிக்கப்படவில்லை' என்றார்.
பா.ஜ.,வுக்கு கண்டிப்பு
சட்ட மேலவையில், கேள்வி நேரத்தில், பா.ஜ., உறுப்பினர் சிதானந்த கவுடா, உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும் போது, குறுக்கிட்ட மேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி, 'கேள்வி நேரத்தில் அது பற்றி இங்கு பேச வேண்டாம்' என்றார். ஆனாலும், சிதானந்த கவுடா தொடர்ந்து பேசும் போது, 'உனக்கு பேச கொடுத்ததே தவறாகிவிட்டது' என்று கூறி, அவரை தடுத்தார்.
அருமையான படம்
சட்டமேலவையில், வனத்துறை தொடர்பாக, பா.ஜ., உறுப்பினர் பிரதாப் சிம்ஹா நாயக் கேள்வி எழுப்பினார்.
துண்டு சீட்டு
சட்டமேலவையில், விவாதம் நடந்து கொண்டிருந்தபோது, மேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி, துண்டு சீட்டு எழுதி, சட்ட மேலவை எதிர்க்கட்சி தலைமை கொறடா ரவிகுமாருக்கு அனுப்பினார். அதை பிரித்து பார்த்ததும் அவரும், மேலவை தலைவரும் சிரித்துக் கொண்டனர்.


