பா.ஜ.,வினரே ஊழலின் ராஜா: கர்நாடக துணை முதல்வர் விமர்சனம்
பா.ஜ.,வினரே ஊழலின் ராஜா: கர்நாடக துணை முதல்வர் விமர்சனம்
பா.ஜ.,வினரே ஊழலின் ராஜா: கர்நாடக துணை முதல்வர் விமர்சனம்
ADDED : ஜூலை 26, 2024 01:20 PM

பெங்களூரு: ''எங்கள் (காங்கிரஸ்) ஆட்சியில் எந்த தவறோ, மோசடியோ நடக்கவில்லை. ஒவ்வொரு ஊழலும், முறைகேடுகளும் பா.ஜ., ஆட்சியில்தான் நடந்துள்ளது. ஊழலின் ராஜா அவர்கள்தான்'' என கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் கூறியுள்ளார்.
மைசூரு நகர்புற வளர்ச்சி ஆணையத்திற்கு (முடா) சொந்தமான வீட்டுமனை நிலத்தை முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு ஒதுக்கீடு செய்த விவகாரத்தில் ஊழல் நடந்து இருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முடா ஊழல் குறித்து சட்டசபையில் விவாதிக்க அனுமதி கோரியும், முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியும் பா.ஜ., எம்எல்ஏ.,க்கள் சட்டசபையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இன்று (ஜூலை 26) கர்நாடக பா.ஜ., எம்.பி.,க்களும் பார்லி., வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முடா ஊழலில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பா.ஜ., சார்பில் பாதயாத்திரை நடத்த முடிவு செய்யப்பட்டது. இது குறித்து கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் கூறியதாவது: பா.ஜ.,வின் பாதயாத்திரை மற்றும் அவர்களின் அரசியல் நடவடிக்கைகளில் நான் தலையிட விரும்பவில்லை. அது முதல்வரின் மனைவிக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்ட சொத்து. இந்த விவகாரத்தில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.
இது முடாவால் கையகப்படுத்தப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது. எனவே, இழப்பீடு வழங்க கர்நாடக அரசும், முடாவும் முடிவு செய்துள்ளன. காங்கிரஸ் அரசுக்கு களங்கம் ஏற்படுத்தவும், முதல்வர் மற்றும் மாநில அரசை சீர்குலைக்கவும் பா.ஜ., முயற்சிக்கிறது. எங்கள் ஆட்சியில் எந்த தவறோ, மோசடியோ நடக்கவில்லை. ஒவ்வொரு ஊழலும், முறைகேடுகளும் பா.ஜ., ஆட்சியில்தான் நடந்துள்ளது. ஊழலின் ராஜா அவர்கள்தான். இவ்வாறு அவர் கூறினார்.