Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ யமுனையில் குளிக்க சென்ற குடும்பம்: ஆற்றில் மூழ்கி 4 சகோதரிகள் உயிரிழப்பு

யமுனையில் குளிக்க சென்ற குடும்பம்: ஆற்றில் மூழ்கி 4 சகோதரிகள் உயிரிழப்பு

யமுனையில் குளிக்க சென்ற குடும்பம்: ஆற்றில் மூழ்கி 4 சகோதரிகள் உயிரிழப்பு

யமுனையில் குளிக்க சென்ற குடும்பம்: ஆற்றில் மூழ்கி 4 சகோதரிகள் உயிரிழப்பு

ADDED : ஜூன் 03, 2025 03:55 PM


Google News
Latest Tamil News
ஆக்ரா:யமுனை ஆற்றில் குளித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 சகோதரிகள் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆக்ரா அருகே நாக்லா சுவாமி கிராமத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தில் உள்ள 4 சகோதரிகள், அவர்களின் தாய் வழி உறவினர்கள் இருவர் என 6 பேரும் அதிக வெப்பம் காரணமாக, ஆக்ராவில் உள்ள யமுனை ஆற்றில் குளிக்கலாம் என்று முடிவு செய்தனர். அதன்படி, அங்கு சென்று ஆற்றில் இறங்கினர். அதற்கு முன் மொபைல் போனில் ரீல்ஸ் செய்தனர். அதனை அருகில் இருந்த ஒருவர் படம் பிடித்தார். அப்போது ரீல்ஸ் மோகத்தில் இருந்த அவர்கள் அறியாமல் ஆழமான பகுதிக்கு சென்றதால் அங்கிருந்த குழிகளில் சிக்கி ஒருவர் பின் ஒருவராக மூழ்கினர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த உள்ளூர்வாசிகள், உடனடியாக அருகில் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அடிப்படையில் அங்கு விரைந்த மீட்பு குழுக்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.இருந்தபோதிலும், நான்கு சிறுமிகளைக் காப்பாற்ற முடியவில்லை. மற்ற இருவரும் எஸ்.என் மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்தவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சகோதரர்களின் மகள்கள் என்றும், சிகிச்சை பெற்று வருபவர்கள் உறவினரை பார்க்க ராமி நாக்லாவிலிருந்து வந்திருந்தனர் எனவும் தெரியவந்தது. மேலும் உயிரிழந்தவர்கள் 10 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us