Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/குஜராத் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை இடைத்தேர்தல்: தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்

குஜராத் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை இடைத்தேர்தல்: தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்

குஜராத் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை இடைத்தேர்தல்: தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்

குஜராத் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை இடைத்தேர்தல்: தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்

Latest Tamil News
புதுடில்லி: 4 மாநிலங்களில் காலியாக உள்ள 5 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் தமது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவின் விவரம் வருமாறு;

குஜராத் மாநிலம் காடி, விசாவதர், கேரள மாநிலம் நிலாம்பூர், பஞ்சாப் மாநிலம் லூதியானா மேற்கு, மே.வங்கத்தில் கலிகஞ்ச் ஆகிய 5 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த 5 தொகுதிகளுக்கும் ஜூன் 19ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கும். இந்த அறிவிப்பின் மூலம் மேற்கண்ட தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருகிறது.

இடைத்தேர்தல் நடக்க உள்ள தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் மே 26ம் தேதி தொடங்குகிறது. மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூன் 2. மனு மீதான பரிசீலனை ஜூன் 3 ஆகும். மனுக்களை திரும்ப பெற கடைசி நாள் ஜூன் 5.

ஓட்டுப்பதிவு நடந்த பின்னர், ஓட்டு எண்ணிக்கை ஜூன் 23ம் தேதி நடைபெறும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us