Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/இடைவிடாது பெய்யும் கனமழை; வயநாடு முண்டக்கையில் மீண்டும் நிலச்சரிவு அபாயம்

இடைவிடாது பெய்யும் கனமழை; வயநாடு முண்டக்கையில் மீண்டும் நிலச்சரிவு அபாயம்

இடைவிடாது பெய்யும் கனமழை; வயநாடு முண்டக்கையில் மீண்டும் நிலச்சரிவு அபாயம்

இடைவிடாது பெய்யும் கனமழை; வயநாடு முண்டக்கையில் மீண்டும் நிலச்சரிவு அபாயம்

UPDATED : ஜூன் 25, 2025 12:42 PMADDED : ஜூன் 25, 2025 12:27 PM


Google News
Latest Tamil News
வயநாடு: வயநாடு முண்டகை பகுதியில் பெய்து வரும் கனமழையால் புதிய நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.

கேரளாவில் கடந்தாண்டு ஜூலை 30ம் தேதி பெய்த பெருமழை பல்வேறு பாதிப்புகளை உண்டாக்கியது.நிலச்சரிவில் முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட பல இடங்கள் பாதிக்கப்பட்டன. 100க்கும் மேற்பட்ட வீடுகள், கட்டடங்கள் மண்ணில் புதைந்தன. 400க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். பலர் காணாமல் போயினர்.

ஒட்டுமொத்த நாடும், கேரளாவில் நிகழ்ந்த துயரத்தால் கடும் துயரம் அடைந்தது. இந்நிலையில் வயநாடு முண்டக்கை பகுதியில் பெய்து வரும் கனமழையால் புதிய நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.

புன்னம்புழா ஆற்றில் நீர் மட்டம் மழையின் எதிரொலியாக உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த ஆற்றின் குறுக்கே தான் கடந்தாண்டு நிலச்சரிவின் போது பெய்லி பாலம் கட்டப்பட்டது.

பாலத்தின் மறுபுறம் உள்ள தேயிலை தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்றுவதற்கான பணிகளை அதிகாரிகள் துவங்கி இருக்கின்றனர். அதே நேரத்தில் நிலச்சரிவு ஏற்படும் என்பதற்கான அதிகாப்பூர்வ அறிவிப்பு அதிகாரிகளால் வெளியிடப்பட இல்லை.

இருப்பினும், மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருப்பதால் வயநாடு, முண்டக்கை பகுதியில் புதிய நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. சரிவு அபாயம் இருக்கும் பகுதிகளில் பொதுமக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு, போலீஸ் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மழை பெய்யும் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us