Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/உ.பி.,யில் கனமழையால் தொடரும் துயரம்; 2 நாட்களில் மின்னல் தாக்கி 25 பேர் பலி!

உ.பி.,யில் கனமழையால் தொடரும் துயரம்; 2 நாட்களில் மின்னல் தாக்கி 25 பேர் பலி!

உ.பி.,யில் கனமழையால் தொடரும் துயரம்; 2 நாட்களில் மின்னல் தாக்கி 25 பேர் பலி!

உ.பி.,யில் கனமழையால் தொடரும் துயரம்; 2 நாட்களில் மின்னல் தாக்கி 25 பேர் பலி!

UPDATED : ஜூன் 16, 2025 05:46 PMADDED : ஜூன் 16, 2025 05:45 PM


Google News
Latest Tamil News
லக்னோ: உ.பி.,யில் 14 மாவட்டங்களில் கடந்த 2 நாட்களில், மின்னல் தாக்கி குழந்தைகள் உட்பட 25 பேர் உயிரிழந்தனர்.

உத்தரபிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பலத்த மழை கொட்டி தீர்த்துள்ளது. திடீர் வானிலை மாற்றம் காரணமாக பல மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. காஸ்கஞ்ச் மற்றும் பதேபூர் பகுதிகள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.

மரங்கள் வேரோடு சாய்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளன. அடுத்த இரண்டு நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

கடந்த 2 நாட்களில் 14 மாவட்டங்களில் மின்னல் தாக்கி, எட்டு பெண்கள் மற்றும் ஏழு குழந்தைகள் உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் அடங்குவர்.

மின்னல், புயல் அல்லது மழை தொடர்பான பேரிடர்களால் மனிதர்கள் அல்லது விலங்குகள் உயிரிழந்தால், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண நிதி உடனடியாக வழங்க வேண்டும். பயிர்கள் சேதம் குறித்து கணக்கீடு நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us