புர்கா அணியாதவர்களுக்கு நரகம்: பள்ளி சிறுமி கருத்தால் சர்ச்சை
புர்கா அணியாதவர்களுக்கு நரகம்: பள்ளி சிறுமி கருத்தால் சர்ச்சை
புர்கா அணியாதவர்களுக்கு நரகம்: பள்ளி சிறுமி கருத்தால் சர்ச்சை

4ம் வகுப்பு
கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. இதில், முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த 4ம் வகுப்பு சிறுமி கலந்து கொண்டார். அவர், கண்காட்சியில் இரண்டு பொம்மைகளை வைத்து இருந்தார். அதில், புர்கா உடை அணிந்த ஒரு பொம்மையும், மேற்கத்திய உடை அணிந்த பொம்மையும் வைக்கப்பட்டு இருந்தன.
தேள்கள் தின்றுவிடும்
இதற்கு விளக்கம் அளித்து, சிறுமி கூறியதாவது: புர்கா உடை அணிந்தவர்களின் உடலுக்கு இறந்த பின்பு எதுவும் நடக்காது. ஆனால், குட்டையான உடை அணிந்தவர்களின் உடல்களை பாம்புகள், தேள்கள் தின்றுவிடும். அதுமட்டுமின்றி, அவர்கள் நரகத்திற்கு செல்வர். புர்கா அணியாமல், தன் மனைவியை வெளியே நடமாட அனுமதிக்கும் கணவர், மிகவும் மோசமானவர். இவ்வாறு அவர் கூறினார்.
கண்டனம்
இது வீடியோவாக, நேற்று முன்தினம் இணையத்தில் பரவியது. இந்த வீடியோ கடந்த ஜனவரி 5ம் தேதி எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.