Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/பாக்., தூதரக அதிகாரி நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு 24 மணி நேரம் கெடு

பாக்., தூதரக அதிகாரி நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு 24 மணி நேரம் கெடு

பாக்., தூதரக அதிகாரி நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு 24 மணி நேரம் கெடு

பாக்., தூதரக அதிகாரி நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு 24 மணி நேரம் கெடு

UPDATED : மே 14, 2025 11:09 AMADDED : மே 13, 2025 09:17 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி: தனது அதிகார வரம்பை மீறி, இந்தியாவிற்கு எதிராக செயல்பட்ட பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஒருவரை, அடுத்த 24 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறும்படி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. கடந்த 7 முதல் 10ம் தேதி வரை நடந்த மோதல் காரணமாக பதற்றம் அதிகரித்தது. பாகிஸ்தான் ராணுவ டி.ஜி.எம்.ஓ., வேண்டுகோள் படி, போர் நிறுத்தம் ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில், டில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர், தனது அதிகார வரம்பை மீறி இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டு உள்ளார். இதனையடுத்து அவரை, 'ஏற்றுக்கொள்ள முடியாதவர்' என அறிவித்து உள்ளதுடன் அடுத்த 24 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேறும்படி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. இது தொடர்பாக தூதரக பொறுப்பு அதிகாரிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us