Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/2030க்குள் மின்சார வாகன சந்தை மதிப்பு 20 லட்சம் கோடி ரூபாயை எட்டும்: நிதின் கட்காரி தகவல்

2030க்குள் மின்சார வாகன சந்தை மதிப்பு 20 லட்சம் கோடி ரூபாயை எட்டும்: நிதின் கட்காரி தகவல்

2030க்குள் மின்சார வாகன சந்தை மதிப்பு 20 லட்சம் கோடி ரூபாயை எட்டும்: நிதின் கட்காரி தகவல்

2030க்குள் மின்சார வாகன சந்தை மதிப்பு 20 லட்சம் கோடி ரூபாயை எட்டும்: நிதின் கட்காரி தகவல்

Latest Tamil News
புதுடில்லி: இந்தியாவில் 2030ம் ஆண்டுக்குள் மின்சார வாகனங்களின் சந்தை மதிப்பு 20 லட்சம் கோடி ரூபாயை தொடும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.

இது தொடர்பாக லோக்சபாவில் அவர் கூறியதாவது: தற்போது இந்தியாவில் 57 லட்சம் மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2024 - 25 மின்சார வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. மின்சாரத்தில் இயங்கும் கார்களின் விற்பனை 20.8 சதவீதமும், டூவிலர்களின் விற்பனையும் 33 சதவீதமும், மூன்று சக்கர வாகனங்களின் விற்பனையும் 18 சதவீதமும் அதிகரித்துள்ளது.

அதேபோல், பெட்ரோல், டீசல் கார்களின் கார்களின் விற்பனையும் 4.2 சதவீதமும், டூவிலர்களின் விற்பனையும் 14 சதவீதமும் மூன்று சக்கர வாகனங்களின் எண்ணிக்கையும் 6 சதவீதமும் அதிகரித்துள்ளது. 2030 ம் ஆண்டுக்குள் இந்தியாவில் மின்சார வாகனங்களின் சந்தை 20 லட்சம் கோடி ரூபாயை தாண்டும். ஆண்டுக்கு 5 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன் 400 க்கும் மேற்பட்ட மின்சார வாகனங்களின் ஸ்டார்ட் அப் சந்தையை உருவாக்கும். இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us