Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/டில்லியில் தீவிர சோதனை: சட்டவிரோதமாக தங்கிய வங்கதேசத்தினர் 83 பேர் கைது

டில்லியில் தீவிர சோதனை: சட்டவிரோதமாக தங்கிய வங்கதேசத்தினர் 83 பேர் கைது

டில்லியில் தீவிர சோதனை: சட்டவிரோதமாக தங்கிய வங்கதேசத்தினர் 83 பேர் கைது

டில்லியில் தீவிர சோதனை: சட்டவிரோதமாக தங்கிய வங்கதேசத்தினர் 83 பேர் கைது

ADDED : ஜூன் 29, 2025 08:49 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி: கிழக்கு டில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 83 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டில்லியில் சட்டவிரோத குடியேற்றம் குறித்து அடிக்கடி சர்ச்சை எழுகிறது. கிழக்கு டில்லியின் கரோல் பாக், லக்ஷ்மி நகர் மற்றும் சீலம்பர் பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில், ஆவணங்கள் இல்லாமல் சிலர் தங்கியிருந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக போலீசார் கூறியதாவது: போலியான ஆவணங்கள் மூலம் இங்கு வேலை பெற்று, கட்டுமான தொழிலாளர்களாகவும், வீட்டு வேலைக்காரர்களாகவும் பணிபுரிந்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து 50 ஆண்கள், 22 பெண்கள் மற்றும் 11 குழந்தைகள் உள்பட 83 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள். கைதானவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். இதனை தொடர்ந்து வங்கதேச துாதரகத்துடன் தொடர்பு கொண்டு நாடு கடத்தும் செயல்முறை தொடங்கப்படும்.

இவ்வாறு போலீசார் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us