மத்திய அரசு ஊழியர்களுக்கு 'ஜாக்பாட்' ; 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு
மத்திய அரசு ஊழியர்களுக்கு 'ஜாக்பாட்' ; 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு
மத்திய அரசு ஊழியர்களுக்கு 'ஜாக்பாட்' ; 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு

'வந்தே மாதரம்' கொண்டாட்டம்
அதேபோல், 'வந்தே மாதரம்' பாடலின் 150வது ஆண்டை, நாடு முழுதும் கொண்டாடவும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், 'சுதந்திரப் போராட்டத்தின் போது, 'வந்தே மாதரம்' பாடல் முக்கிய பங்கு வகித்தது. இதை கருத்தில் கொண்டு, இந்த பாடலின் 150வது ஆண்டை குறிக்கும் வகையில், நாடு தழுவிய கொண்டாட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட் டுள்ளது' என, தெரிவித்தார்-.
பருப்பு கொள்முதல்
மேலும், பருப்பு உற்பத்தியில் தன்னிறைவு பெறும் வகையில், 2030 - 31ம் ஆண்டுக்குள், உற்பத்தியை 350 லட்சம் டன்களாக உயர்த்தும் திட்டத்துக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. விதைகளை மேம்படுத்துதல், அறுவடைக்குப் பிந்தைய உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் உறுதியான கொள்முதல் வாயிலாக 2 கோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில், இந்த திட்டத்துக்கு 11,440 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
57 கேந்திரிய வித்யாலயா
நாடு முழுதும் புதிதாக 57 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை துவங்கவும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில், ஏழு பள்ளிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நிதி உதவி செய்யும் என்றும், மீதமுள்ள பள்ளிகளுக்கு மாநில அரசு நிதியுதவி செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இல்லாத மாவட்டங்களில் துவக்கப்படும் இந்த பள்ளிகள் வாயிலாக 86,000 மாணவர்கள் பயனடைவர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


