சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன்; காலணி வீசிய வழக்கறிஞர் திட்டவட்டம்
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன்; காலணி வீசிய வழக்கறிஞர் திட்டவட்டம்
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன்; காலணி வீசிய வழக்கறிஞர் திட்டவட்டம்

சஸ்பெண்ட்
அப்போது, 71 வயதான ராகேஷ் கிஷோர் என்ற வழக்கறிஞர், திடீரென காலில் அணிந்திருந்த காலணியை கழற்றி, தலைமை நீதிபதி நோக்கி வீச முயன்றார்.அதற்குள் உஷாரடைந்த நீதி மன்ற காவலர்கள், உடனடியாக பாய்ந்து சென்று வழக்கறிஞரை தடுத்து நிறுத்தினர். இதனால், அவர் வீச முயன்ற காலணி தலைமை நீதிபதி மீது படாமல் கீழே விழுந்தது.
இந்நிலையில், தலைமை நீதிபதி மீது காலணி வீசியது குறித்து வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் நேற்று கூறியதாவது:
தலைமை நீதிபதி மீது காலணி வீசியது நானல்ல; கடவுள் தான் அதை செய்தார். இது கடவுளின் கட்டளை, ஒரு செயலுக்கான எதிர்வினை. தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் சனாதன தர்மத்தை அவமதித்து விட்டார். இதன் காரணமாகவே அவர் மீது காலணியை வீசினேன்.
பின்னணி
மத்திய பிரதேசத்தின் கஜூராஹோவில் 7 அடி உயர முள்ள விஷ்ணு சிலையை சமூக விரோதிகள் சிலர் சேதப்படுத்தினர்.இது தொடர்பாக தாக்கல் செய்யப் பட்ட பொதுநல மனுவை விசாரிக்க தலை மை நீதிபதி பி.ஆர்.கவாய் மறுத்துவிட்டார். அத்துடன், ''எதையாவது செய்யும்படி அந்த கடவுளிடமே சென்று கேளுங்கள்,'' என கருத்து கூறியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.


