ஜனநாயக காவலர் லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண்!
ஜனநாயக காவலர் லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண்!
ஜனநாயக காவலர் லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண்!

மக்கள் நம்பிக்கை
இந்நாளில் அவரது வாழ்க்கை மற்றும் தத்துவத்தை வெளிப்படுத்தும் இந்தக் கட்டுரை வாயிலாக, அந்த மகத்தான தலைவருக்கு என் மரியாதையை செலுத்துகிறேன். சீதாப்தியாராவிலிருந்து லோக் நாயக்கின் எளிமையான தொடக்கம், அவரது வாழ்க்கை முறையில் வேரூன்றவும், ஏழைகளை சூழ்ந்திருக்கும் பிரச்னைகளை அறிந்து கொள்ளவும் உதவியது. இன்டர்மீடியட் கல்வி பயின்ற நாட்களில், அஹிம்சை மற்றும் ஒத்துழையாமை இயக்கம், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக நாடு முழுவதும் எழுச்சி பெற்றது.
சமூக விழிப்புணர்வு
ஊழலுக்கு எதிரான அவரது இடைவிடாத முழக்கம், அந்த நாட்களில் அரசியலில் நிலையான இடத்தை பெற்றது. இது, ஜனநாயகத்தில் மக்கள் சக்தி நிறுவப்படுவதற்கும் காரணமாக அமைந்தது. நான், 19 வயது இளைஞனாக இருந்த போது, சம்பூர்ண கிராந்தி இயக்கத்திற்கு பங்களிப்பு செய்ய, கோயம்புத்துார் மாவட்ட அமைப்பு செயலாளராக இருந்தது, எனக்கு மகத்தான கவுரவமும், பெருமையுமாகும்.
பாரத ரத்னா
ஜெயப்பிரகாஷ் நாராயணின் போதனைகள் தொடர்ந்து அரசியல்வாதிகளை மட்டும் ஈர்க்கவில்லை, ஜனநாயகம், சுதந்திரம், சமத்துவம் என்ற சிந்தனைகளில் நம்பிக்கையுள்ள, இந்திய குடிமகன்கள் ஒவ்வொருவரையும் ஈர்த்தது.


