Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ வாய்ஜால வித்தகர் மோடி: ராகுல் கடும் விமர்சனம்

வாய்ஜால வித்தகர் மோடி: ராகுல் கடும் விமர்சனம்

வாய்ஜால வித்தகர் மோடி: ராகுல் கடும் விமர்சனம்

வாய்ஜால வித்தகர் மோடி: ராகுல் கடும் விமர்சனம்

ADDED : ஜூன் 22, 2025 01:20 AM


Google News
Latest Tamil News
புதுடில்லி: 'வெற்று முழக்கங்களை விடுவதில் பிரதமர் நரேந்திர மோடி கைதேர்ந்தவர். ஆனால், தீர்வுகளை வழங்குவதில் தோல்வி அடைந்தவர்' என, காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் விமர்சித்துள்ளார்.

சமூக வலைதளத்தில் ராகுல் நேற்று வெளியிட்ட பதிவு:

உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவிக்கும் 'மேக் இன் இந்தியா' திட்டம், இந்தியாவில் அதிகளவில் தொழிற்சாலைகள் பெருகும் என்ற வாக்குறுதியை அளித்தது.

ஆனால், உற்பத்தி ஏன் குறைந்துள்ளது? வேலையில்லா இளைஞர்களின் எண்ணிக்கை ஏன் அதிகரித்துள்ளது? சீனாவிலிருந்து இறக்குமதிகள் ஏன் இரட்டிப்பாகி உள்ளன?

பிரதமர் மோடி வாய்ஜால வித்தகர். வெற்று முழக்கங்களை விடுவதில் தேர்ச்சி பெற்றவர். ஆனால், தீர்வுகளை வழங்குவதில் தோல்வி அடைந்தவர். 2014 முதல், நம் உற்பத்தி 14 சதவீதமாக குறைந்துஉள்ளது.

மத்திய அரசு இறக்குமதியில் தான் ஆர்வம் காட்டுகிறது; உள்நாட்டு நிறுவனங்கள் பெருகுவதில் அல்ல. இறக்குமதி அதிகரிப்பால் சீனா லாபம் அடைகிறது. புதிய யோசனைகள் எதுவும் இல்லாமல், மோடி சரணடைந்து விட்டார்.

நேர்மையான சீர்திருத்தங்கள், நிதி ஆதரவு வாயிலாக லட்சக்கணக்கான உற்பத்தியாளர்களுக்கு அதிகாரம் அளிக்கும் அடிப்படை மாற்றமே இந்தியாவுக்கு தேவை.

மற்றவர்களுக்கு ஒரு சந்தையாக இருப்பதை நாம் நிறுத்த வேண்டும். நாம் இங்கே நிறுவனங்களை உருவாக்கவில்லை என்றால், இறக்குமதி தொடரும். காலம் ஓடிக்கொண்டே இருக்கிறது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

கவனிக்க நேரமில்லை!

ராகுலுக்கு பதிலடி கொடுத்து, பா.ஜ., தேசிய செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி கூறியதாவது:ராகுலை தவிர, நாட்டில் உள்ள அனைவரும் பிரதமர் மோடி தலைமையின் கீழ் நாடு அடைந்து வரும் முன்னேற்றத்தை பார்த்து வருகின்றனர். நம் நாட்டை குறை கூறுவதிலேயே மும்முரமாக இருக்கும் ராகுலுக்கு, இதை கவனிக்க நேரமிருக்காது.'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையே, நாட்டின் உற்பத்தித் திறனுக்கான சமீபத்திய உதாரணம் மற்றும் மைல்கல். காங்., ஆட்சியில் ராணுவ தளவாடங்களில் வெளிநாடுகளையே சார்ந்திருந்தோம். தற்போது அந்நிலை தலைகீழாக மாறி உள்ளதோடு மட்டுமின்றி, நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ உபகரணங்களுக்கு வெளிநாடுகளில் மவுசு ஏற்பட்டுள்ளது. இது ராகுலுக்கு தெரியாதா? அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டுகளை கூறுவதே அவருக்கு வாடிக்கையாகி விட்டது.இவ்வாறு அவர் கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us