Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ வியாபாரியிடம் ரூ.20 லட்சம் வைர நகையை பறித்த குரங்கு

வியாபாரியிடம் ரூ.20 லட்சம் வைர நகையை பறித்த குரங்கு

வியாபாரியிடம் ரூ.20 லட்சம் வைர நகையை பறித்த குரங்கு

வியாபாரியிடம் ரூ.20 லட்சம் வைர நகையை பறித்த குரங்கு

ADDED : ஜூன் 08, 2025 04:14 AM


Google News
மதுரா: உத்தர பிரதேசத்தின் மதுரா - பிருந்தாவன் பகுதியில், தாகுர் பங்கே பிஹாரி என்ற ஹிந்து கோவில் உள்ளது. இங்கு அலிகாரை சேர்ந்த வைர வியாபாரி அபிஷேக் அகர்வால், கோவிலில் தரிசனம் செய்து விட்டு, பார்க்கிங்கில் நிறுத்தியிருந்த காரை நோக்கி சென்றார்.

அப்போது அங்கு கூடியிருந்த குரங்கு கூட்டத்தில் இருந்து ஒரு குரங்கு, அகர்வால் வைத்திருந்த வைர நகை அடங்கிய பையை பறித்துச் சென்றது.

அதில், 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர நகை இருந்ததால், குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதனால் பழம், பிஸ்கட் என குரங்குக்கு பிடித்தமான உணவுப் பொருளை கொடுத்து அவர்கள், நகைப்பையை திரும்ப பெற முயன்றனர்.

ஆனால், எதற்கும் அசராத குரங்கு, நகைப்பையை திரும்ப தர மறுத்தது.

போலீசார் வந்து குரங்கிடம் இருந்து சாதுர்யமாக நகையை பறித்தனர். 8 மணி நேர போராட்டத்துக்கு பின் மீட்கப்பட்ட நகையை அகர்வாலிடம் போலீசார்,ஒப்படைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us