ஆப்பரேஷன் சிந்தூர் தவிர்க்க முடியாத ஒன்று: ராணுவ டிஜிஎம்ஓ திட்டவட்டம்
ஆப்பரேஷன் சிந்தூர் தவிர்க்க முடியாத ஒன்று: ராணுவ டிஜிஎம்ஓ திட்டவட்டம்
ஆப்பரேஷன் சிந்தூர் தவிர்க்க முடியாத ஒன்று: ராணுவ டிஜிஎம்ஓ திட்டவட்டம்

அப்பாவி மக்கள் உயிரிழப்பு
1980 களில் தான் ஜம்மு காஷ்மீரில் பிரச்னை ஆரம்பித்தது. அது முதல் தற்போது வரை 28 ஆயிரம் பயங்கரவாத சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. 1990 முதல் அம்மாநிலத்தில் சிறுபான்மையினராக உள்ள ஒரு லட்சம் மக்கள் வெளியேறினர். 60 ஆயிரம் குடும்பங்கள் இடம் பெயர்ந்தன. 15 ஆயிரம் அப்பாவி மக்கள் மற்றும் 3 ஆயிரம் பாதுகாப்பு பாதுகாப்புப் படையினர் உயிரிழந்துள்ளனர். இதற்கான உத்தரவு எங்கிருந்து வருகிறது என்பது தெளிவாக தெரியும்.
கட்டாயம்
ஆப்பரேஷன் சிந்தூர் ஒரே நாள் இரவில் நடக்கவில்லை. 2001 ல் நமது பார்லிமெண்ட் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து நமது படைகள் எல்லையில் குவிக்கப்பட்டன. அங்கு ஓராண்டு காலம் வீரர்கள் இருந்தனர். 2016 ல் நமது பாதுகாப்பு ப டை வீரர்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். நமது முகாம்கள் தீவைத்து வைக்கப்பட்டன. இதனையடுத்து நாம் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டோம். இதனால், மீண்டும் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதி அருகில் இருந்து நடவடிக்கை மேற்கொண்டோம். 2019 ல் நாம் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் துல்லியமான தாக்குதல் நடத்தினோம். ஆனால், தற்போது, அதனை தாண்டிச் சென்றோம். அதற்கு நடந்த நிகழ்வுகளின் தீவிரம் மற்றும் அளவு தான் காரணம்.
இலக்குகள்
ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கை தவிர்க்க முடியாதது என்பதை அனைவரும் உணர்ந்தனர். ஆனால், நாங்கள் எங்கள் நேரத்தை எடுத்துக் கொண்டோம். ஆயுதப்படைகள் நடவடிக்கை எடுப்பதற்கு ராணுவ தளபதி அனுமதி அளித்தார். எங்களது இலக்குகளை நாங்கள் முன்னிலைப்படுத்தினோம். எதிரிகளை தடுக்க எல்லையில் முன்னெச்சரிக்கையாக படைகள் நிறுத்தப்பட்டன. அரசின் துறைகள் ஒன்றுக்கு ஒன்று தாங்களாகவே ஒருங்கிணைந்தன. தாக்குதல் நடத்த வேண்டிய இடங்கள் அனைத்தும் தேர்வு செய்யப்பட்டன. அவை ஒவ்வொன்றாக ஆய்வு செய்யப்பட்டு, அதிலிருந்து இறுதிப்பட்டியல் தயாரிக்கப்பட்டது. அந்த இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார்


