எதிர்க்கட்சிகள் கடும் அமளி: முடங்கியது பார்லிமென்ட்!
எதிர்க்கட்சிகள் கடும் அமளி: முடங்கியது பார்லிமென்ட்!
எதிர்க்கட்சிகள் கடும் அமளி: முடங்கியது பார்லிமென்ட்!

புதுடில்லி: தொகுதி சீரமைப்பு உள்ளிட்ட விவகாரம் குறித்து பார்லிமென்டில் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் நாள் முழுதும் ஒத்திவைக்கப்பட்டன.
பட்ஜெட் கூட்டத்தொடரின் முதலாவது அமர்வு கடந்த ஜன.,31 முதல் பிப்.,13 வரை நடந்தது. இரண்டாவது அமர்வு கடந்த மார்ச் 10ம் தேதி துவங்கியது. ஏப்., 4 வரை நடக்க உள்ளது. கூட்டத்தொடர் துவங்கி முதல் நாளில் இருந்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று (மார்ச் 20) காலை 11 மணிக்கு பார்லிமென்ட் இரு அவைகளும் கூடியது. லோக்சபா கூடியதும் தொகுதி சீரமைப்பு குறித்து விவாதிக்க கோரி தமிழக எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் கூச்சல், குழப்பம் நிலவியது. சபாநாயகர் ஓம்பிர்லா பலமுறை எச்சரித்தும் தி.மு.க., எம்.பி.,க்கள் கண்டுகொள்ளவில்லை.
இதனால் அவையை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைத்து சபாநாயகர் ஓம்பிர்லா உத்தரவிட்டார். அதேபோல் ராஜ்சபாவிலும் அவை கூடியதில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டதால், அவையை ஒத்திவைத்து ஜக்தீப் தன்கர் உத்தரவிட்டார். இதனால் பார்லிமென்ட் இரு அவைகளும் செயல்படாமல் முடங்கின. நாளை காலை 11 மணி வரை பார்லிமென்ட ஒத்திவைக்கப்பட்டது.