போர் நிறுத்தத்திற்கு பாகிஸ்தான் மன்றாடியது: ஐநாவில் பாக்., பொய்யை உடைத்தது இந்தியா!
போர் நிறுத்தத்திற்கு பாகிஸ்தான் மன்றாடியது: ஐநாவில் பாக்., பொய்யை உடைத்தது இந்தியா!
போர் நிறுத்தத்திற்கு பாகிஸ்தான் மன்றாடியது: ஐநாவில் பாக்., பொய்யை உடைத்தது இந்தியா!

அபத்தமான நாடகம்
இது குறித்து ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் திரித்து பேசினார். இதற்கு ஐநா கூட்டத்தில் இந்தியா தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. இது குறித்து ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதரகத்தின் முதல் செயலாளர் பெட்டல் கெலாட் பேசியதாவது: இந்தச் சபை காலையில் பாகிஸ்தான் பிரதமரிடமிருந்து அபத்தமான நாடகங்களைக் கண்டது, அவர் மீண்டும் ஒருமுறை பயங்கரவாதத்தை மகிமைப்படுத்தினார்.
பொய் கதை
இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களுக்கு இடையேயான எந்தவொரு தீர்க்கப்படாத பிரச்னையும் இருதரப்பு ரீதியாக தீர்க்கப்படும். அந்த வகையில் எந்த மூன்றாம் தரப்பினருக்கும் இடமில்லை. எந்த அளவிலான நாடகமும் எந்த அளவிலான பொய்களும் உண்மைகளை மறைக்க முடியாது. பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்கிறது. அந்த நோக்கத்திற்காக பாகிஸ்தான் பிரதமர் மிகவும் பொய்யான கதைகளை கூறுவதில் அவருக்கு எந்த வெட்கமும் இல்லை.
அடிபணியாது
அணுசக்தி மிரட்டலின் கீழ் பயங்கரவாதம் நடைமுறைப்படுத்தப்படுவதையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அத்தகைய அச்சுறுத்தல்களுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது. உலகிற்கு இந்தியா தெளிவாக ஒன்றை கூறுகிறது. பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக் கொள்ள கூடாது.


