ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ஒப்பிட்டு ராஜ்நாத் சிங் பாராட்டு
ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ஒப்பிட்டு ராஜ்நாத் சிங் பாராட்டு
ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ஒப்பிட்டு ராஜ்நாத் சிங் பாராட்டு

அறுவை சிகிச்சை நிபுணர்கள்
குற்றவாளிகளைத் தண்டிக்கும் அதே வேளையில், அப்பாவி உயிர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை நமது பாதுகாப்பு படையினர் உறுதி செய்தனர்.நமது வீரர்கள் நிபுணத்துவம் வாய்ந்த டாக்டர்கள் அல்லது அறுவை சிகிச்சை நிபுணர்கள் போன்று செயல்பட்டனர். அறுவை சிகிச்சையாளர்கள், நோய் உள்ள பகுதிகளில் துல்லியமாக கருவிகளை பயன்படுத்துவார்கள். நமது பாதுகாப்பு படையினரும் அது போன்று பயன்படுத்தினர். துல்லியமாக பயங்கரவாதத்தை வேரோடு அழிக்கும் வகையில் தாக்குதல் நடத்தினர்.
பயங்கரவாதி முகாம்கள்
மே 7ம் தேதி இந்திய ராணுவ நடவடிக்கையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பல பயங்கரவாதிகள் முகாம்கள் தாக்கப்பட்டது. டாக்டர்களும், வீரர்களும் நாட்டிற்கு முக்கியமான வகையில் சேவையாற்றுவார்கள். ஒருவர் சுகாதாரத்தை பாதுகாப்பார். மற்றொருவர் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வார். பாகிஸ்தான் அதன் சொந்த பயங்கரவாதத்தால் அழிந்துவிடும். இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.