கரூர் நெரிசல் பலி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கிடுக்கி
கரூர் நெரிசல் பலி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கிடுக்கி
கரூர் நெரிசல் பலி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கிடுக்கி

மேல் முறையீடு
இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், ஐ.ஜி., அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைத்து உத்தரவிட்டார். இந்நிலையில், விஜய் குறித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் தெரிவித்த கருத்துகளுக்கு எதிராகவும், சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டதற்கு எதிராகவும், த.வெ.க., சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
குடிமக்கள் உரிமை
தீர்ப்பில் அவர்கள் கூறியிருப்பதாவது: கரூர் துயர சம்பவத்தை மக்களின் அடிப்படை உரிமை சார்ந்த விவகாரமாக கருதுகிறோம். 'பாரபட்சம் இல்லாமல், வெளிப்படை தன்மையுடன் விசாரணை நடக்க வேண்டும்' என கேட்பது குடிமக்களின் உரிமை. எனவே, இந்த வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றுகிறோம். சி.பி.ஐ., விசாரணையை கண்காணிக்க, சிறப்பு குழுவையும் அமைக்கிறோம்.
மிகப்பெரிய சதி
அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, 'இந்த விவகாரத்தில் மனுதாரர்கள் பன்னீர்செல்வம், செல்வராஜ் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் தாங்கள் எந்த வழக்கையும் தாக்கல் செய்யவில்லை' என கூறியுள்ளதாக தெரிவித்தார்.


