Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/கடைகளில் தமிழ் பெயர் பலகை கட்டாயம்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உத்தரவு

கடைகளில் தமிழ் பெயர் பலகை கட்டாயம்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உத்தரவு

கடைகளில் தமிழ் பெயர் பலகை கட்டாயம்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உத்தரவு

கடைகளில் தமிழ் பெயர் பலகை கட்டாயம்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உத்தரவு

ADDED : மார் 18, 2025 01:03 PM


Google News
Latest Tamil News
புதுச்சேரி: புதுச்சேரியில் கடைகளில் தமிழ் பெயர் பலகை கட்டாயம் வைக்க வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரியில் கடந்த 10ம் தேதி கவர்னர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. மார்ச் 12ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இந் நிலையில், சட்டசபையின் இன்றைய (மார்ச் 18) நாள் நிகழ்வின் போது புதுச்சேரியில் உள்ள கடைகளில் பெயர் பலகைகள் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளதாக உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

இதற்கு முதல்வர் ரங்கசாமி பதிலளித்து பேசியதாவது;

புதுச்சேரிக்கு உட்பட்ட அனைத்து இடங்களிலும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளில் தமிழ் எழுத்து இருப்பது கட்டாயம். தமிழில் பெயர் பலகை இருக்க வேண்டும்.

இதை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்கவேண்டும். அரசின் விழா அழைப்பிதழ்களிலும் தமிழ் இடம் பெற்று இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us