விமானம் நொறுங்கியதில் இறந்த தாய், 2 வயது மகளை தேடி அலையும் தொழிலாளி
விமானம் நொறுங்கியதில் இறந்த தாய், 2 வயது மகளை தேடி அலையும் தொழிலாளி
விமானம் நொறுங்கியதில் இறந்த தாய், 2 வயது மகளை தேடி அலையும் தொழிலாளி

டிஎன்ஏ சோதனை
இது தொடர்பாக ரவி என்ற அந்த நபர் கூறியதாவது: நேற்று வழக்கம் போல் எங்களது பணிகளில் ஈடுபட்டோம். ஆனால், அன்றைய நாள் இயல்பானதாக இல்லை. 1 மணியளவில் மருத்துவமனை ஊழியர்களுக்கு உணவு கொடுக்க சென்று விட்டேன். திரும்பி வந்து பார்த்த போது, விமான விபத்து நடந்தது தெரியவந்தது. அங்கு தான் எனது தாயார் ஷரளா பென் தாக்கூரும், மகள் ஆதியாவும் இருந்தனர். எனது டிஎன்ஏ பரிசோதனையை கொடுத்து விட்டேன். அதன் மூலம் எனது மகள் உடலை அடையாளம் காண முடியும் என நம்புகிறேன் என தெரிவித்தார்.
தெரியாது
ரவியின் சகோதரி பாயல் கூறியதாவது: விடுதிக்கு சென்ற தாயார் திரும்பவேயில்லை எனது உறவினரும் உடன் இருந்தார். நேற்று முதல் தேடி வருகிறோம். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. எங்களுக்கு எதுவும் தெரியவில்லை. இன்னும் 72 மணி நேரம் காத்திருக்க வேண்டும் என சொல்கின்றனர். ஒவ்வொரு இடமாக அலைந்தும் ஒன்றும் நடக்கவில்லை என்றார்.
நடந்தது என்ன - மாணவர் பேட்டி
மருத்துவ கல்லூரியில் 2ம் ஆண்டு படிக்கும் அருண் பிரசாந்த் கூறியதாவது: நேற்று 5வது மாடியில் மதியம் 1:30 மணியளவில் உணவருந்தி கொண்டு இருந்தோம். திடீரென புகை மூட்டமாக காணப்பட்டது. என்ன செய்வது என தெரியவில்லை. எங்களை புகை சூழ்ந்ததால், நாங்கள் ஓடினோம். நான் முதல் மாடிக்கு வந்து அங்கிருந்து கீழே குதித்து தப்பினேன். விபத்து நடந்த போது சிலர் அந்த கட்டடத்தில் இருந்தனர். வெளியில் வந்த பிறகு தான் விமான விபத்து நடந்தது தெரியவந்தது. 15- 20 நிமிடங்களில் மீட்புப்படையினர் வந்தனர் என்றார்.
ஊழியர்கள் சொல்வது என்ன
விடுதி ஊழியர்கள் சிலர் கூறியதாவது: உயிரை காப்பாற்றிக் கொள்ள வெளியில் ஓடினோம். ரொட்டி தயாரித்து கொண்டு இருந்த போது விபத்து நடந்தது. 4 குழந்தைகள் இறந்தனர். இன்னும் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெண் ஒருவரும், 2 வயது குழந்தையும் காணவில்லை.விமானம் நொறுங்கிய போது வெடிகுண்டு வெடித்தது போல் தெரிந்தது. விமானம் விழுந்ததாக தெரிவித்தனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.