Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ஆதிதிராவிட சமூகத்தினருக்கு முக்கியத்துவம் குறைப்பு: பா.ம.க.,வில் ராமதாசின் புதிய பாணி

ஆதிதிராவிட சமூகத்தினருக்கு முக்கியத்துவம் குறைப்பு: பா.ம.க.,வில் ராமதாசின் புதிய பாணி

ஆதிதிராவிட சமூகத்தினருக்கு முக்கியத்துவம் குறைப்பு: பா.ம.க.,வில் ராமதாசின் புதிய பாணி

ஆதிதிராவிட சமூகத்தினருக்கு முக்கியத்துவம் குறைப்பு: பா.ம.க.,வில் ராமதாசின் புதிய பாணி

ADDED : ஆக 07, 2010 11:43 PM


Google News
Latest Tamil News

பாட்டாளி மக்கள் கட்சியில் ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்தவர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்படுவதாக முணுமுணுப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தில், ராமதாஸ் 1989ம் ஆண்டு  பாட்டாளி மக்கள் கட்சியை துவக்கினார்.  கட்சியில் வன்னியர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. வன்னியர்கள் மட்டும் கட்சியிலிருந்தால் அரசியலில் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்த ராமதாஸ், வன்னியர்களோடு ஆதிதிராவிட மக்களையும் இணைத்து செயல்பட முடிவு செய்தார்.  ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு பதவிகளைக் கொடுத்தார். பெரும்பாலான மாவட்டங்களில் மாவட்டத் தலைவர் பதவி ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும், மாவட்டச் செயலர் பதவி வன்னியர்களுக்கும் ஒதுக்கப்பட்டது. அதேபோல் ஒன்றியத் தலைவர் பதவியும் ஒதுக்கப்பட்டது. ராமதாஸ், ஆதிதிராவிட மக்களுக்கு முக்கியத்துவம் அளித்தாலும்,  கட்சி பிரமுகர்கள் முக்கியத்துவம் அளிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. கடந்த லோக்சபா தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி, அ.தி.மு.க.,வுடன் இணைந்து போட்டியிட்டது. அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது. கட்சித் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வன்னியர்களுக்கு முக்கியத்துவம் அளிக்காததே கட்சி தோல்விக்கு காரணம் என்றனர்.  அதைத் தொடர்ந்து மீண்டும் வன்னியர் சங்கத்தை பலப்படுத்தவும், கட்சியில் வன்னியர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவும் முடிவு செய்தனர்.



பெண்ணாகரம் இடைத்தேர்தலில் ராமதாஸ், வீடு வீடாக சென்று வன்னியர்களை சந்தித்து பேசினார். 'நம் சமுதாயம் முன்னேற நம் கட்சி வளர வேண்டும்' என்றார். அதன் பயனாக இடைத் தேர்தலில் பா.ம.க., இரண்டாமிடம் பிடித்தது. இதனால் உற்சாகமடைந்த பா.ம.க.,வினர், மீண்டும் வன்னியர் கோஷத்தை பலமாக உச்சரிக்க துவங்கியுள்ளனர். வன்னியர்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு வேண்டும் என போராட துவங்கியுள்ளனர்.  அத்துடன் கட்சியிலிருந்த ஆதிதிராவிட சமூகத்தினரை ஓரம் கட்ட துவங்கியுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் முன்பு ஒன்றியத் தலைவர்களாக 41 இடங்களில் ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்தவர்கள் இருந்தனர். தற்போது ஐந்து பேர் மட்டுமே உள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 21 ஒன்றியத் தலைவர்கள் இருந்தனர். தற்போது ஐந்து பேர் மட்டுமே உள்ளனர். கடலூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் தலா நான்கு மாவட்டத் தலைவர்கள் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர்கள் இருந்தனர். தற்போது தலா ஒருவர் மட்டுமே உள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்த ஐந்து பேர் மாவட்டத் தலைவர்களாக இருந்தனர். தற்போது நான்கு பேர் நீக்கப்பட்டு விட்டனர். இது கட்சியில் உள்ள ஆதிதிராவிடர் சமூகத்தினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதே நிலை நீடித்தால் பா.ம.க., வன்னியர்களை மட்டும் உள்ளடக்கிய கட்சியாக மாறிவிடும். தனித் தொகுதிகளில் போட்டியிடக் கூட ஆள் இருக்க மாட்டார்கள் எனக் கட்சியில் உள்ள ஆதிதிராவிடப் பிரமுகர்கள் புலம்புகின்றனர்.



-  நமது சிறப்பு நிருபர்  -







      Our Apps Available On




      Dinamalar

      Follow us