UPDATED : மே 06, 2026 06:13 PM
ADDED : மே 06, 2026 06:18 PM
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த கல்வி ஆண்டில் 10 ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வில் அதிக மதிப்பெண் எடுத்த போலீசாரின் குழந்தைகளுக்கு பாராட்டு நிகழ்ச்சி எஸ்.பி., அலுவலகத்தில் நடந்தது.
10ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்தவருக்கு ரூ.13 ஆயிரமும், இரண்டாம் மதிப்பெண் எடுத்தவருக்கு ரூ.9 ஆயிரம், 3 ஆம் மதிப்பெண் எடுத்தவருக்கு ரூ.5 ஆயிரம், 4ஆம் மதிப்பெண் எடுத்த 7 மாணவர்களுக்கு தலா ரூ.4 ஆயிரமும், பிளஸ் 2வில் முதல் மதிப்பெண் எடுத்தவருக்கு ரூ.15 ஆயிரம், 2ஆம் மதிப்பெண் எடுத்தவருக்கு ரூ.11 ஆயிரம், 3ஆம் மதிப்பெண் எடுத்தவருக்கு ரூ.7ஆயிரம், 4ஆம் மதிப்பெண் எடுத்த 7 மாணவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் மொத்தம் 20 குழந்தைகளுக்கு ரூ. ஒரு லட்சத்து 23 ஆயிரத்துக்கான வெகுமதியை எஸ்.பி., சிவபிரசாத் வழங்கினார். மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

