பொறியியல் 11010 பேர் சேர்ந்தனர் 1,29,270 காலியிடங்கள்
பொறியியல் 11010 பேர் சேர்ந்தனர் 1,29,270 காலியிடங்கள்
UPDATED : ஜூலை 13, 2011 12:00 AM
ADDED : ஜூலை 13, 2011 12:54 PM
அ நிறம் | அளவு
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் பொறியியல் கலந்தாய்வின் 5வது நாளன்று மொத்தம் 3233 மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அதில் 505 மாணவர்கள் கலந்தாய்விற்கு வரவில்லை. 12 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்றும், பாடப்பிரிவை தேர்வு செய்யாமல் சென்றுவிட்டனர்.
மீதமுள்ள
2716 மாணவர்கள், அவரவர் விரும்பிய பாடப்பிரிவினை தேர்வு செய்து அதற்கான ஆணையையும் பெற்றுக் கொண்டனர். நேற்றும் வராதோர் விழுக்காடு 15.62 ஆக இருந்தது.அதன்படி இதுவரை
11,010 மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர். அண்ணா பல்கலை, அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் இன்னும் 1,29,270 இடங்கள் காலியாக உள்ளன. அவற்றிற்கான கலந்தாய்வு தொடர்ந்து நடைபெறும்.