சுகாதாரப் புள்ளியிலாளர், புள்ளியில் உதவியாளர்; சான்றிதழ் சரிபார்ப்பு
சுகாதாரப் புள்ளியிலாளர், புள்ளியில் உதவியாளர்; சான்றிதழ் சரிபார்ப்பு
UPDATED : ஆக 28, 2015 12:00 AM
ADDED : ஆக 28, 2015 12:13 PM
தமிழ்நாடு
மருத்துவ சார்நிலையில், வட்டார சுகாதாரப் புள்ளியிலாளர் மற்றும் பொது சுகாதார சார்நிலை பணியில் புள்ளியில்
உதவியாளர் போன்ற பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும் செப்.,1ம் தேதி
நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும்
அறிக்கையில்:
மேற்காணும்
பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு கடந்த 26.02.2011 அன்று நடைபெற்றது. மேற்படி பதவிகளில் வட்டார சுகாதாரப்
புள்ளியிலாளர் பதவிக்கான நேர்காணல் தேர்வு கடந்த 19.08.2014 அன்று நடைபெற்றது. மேற்படி சான்றிதழ்
சரிபார்ப்பு/ நேர்காணல் தேர்விற்கு
அனுமதிக்கப்பட்ட 101 விண்ணப்பதாரர்களில் 39 விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்காணல் தேர்வில் கலந்து கொண்டனர்
இந்நிலையில் நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ளத் தவறிய விண்ணப்பதாரர்களுக்கு பதிலாக
61 விண்ணப்பதாரர்கள் இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு/ நேர்காணல் தேர்விற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விண்ணப்பதாரர்களுக்கும் புள்ளியில் உதவியாளர் பதவிக்கான 36
விண்ணப்பதாரர்களுக்கும் சான்றிதழ் சரிபார்பிர்க்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
மேலும்
விவரங்களுக்கு: www.tnpsc.gov.in
