UPDATED : செப் 09, 2015 12:00 AM
ADDED : செப் 09, 2015 10:51 AM
திருப்பூர்
: பல்வேறு
கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு கல்லூரி ஆசிரியர்கள்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்லூரி ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு தேதியை உடனடியாக அறிவிக்க வேண்டும், முறையற்ற இடமாறுதலை நிறுத்த வேண்டும், சி.பி.எஸ்., திட்டத்தை கைவிட வேண்டும், பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், இரண்டாம் நிலை கல்லூரிகளுக்கு உடனடியாக முதல்வர் நியமிக்க வேண்டும், இயக்குனர், இணை இயக்குனர் பணியிடங்களுக்கு பணிமூப்பு அடிப்படையில், நியமனம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில், சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நுழை வாயிலில், போராட்டம், நடைபெற்றது.
போராட்டத்துக்கு சிக்கண்ணா கல்லூரி ஆசிரியர் கழக தலைவர் விநாயகமூர்த்தி தலைமை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷம் எழுப்பப்பட்டது.
