UPDATED : செப் 22, 2015 12:00 AM
ADDED : செப் 22, 2015 10:10 AM
திருப்புத்தூர்
: திருப்புத்தூர்
ஆறுமுகம்பிள்ளை சீதை அம்மாள் கல்லூரியில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான
வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம் கல்லூரி விலங்கியல்துறை, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடந்தது.
முதல்வர் சுப்பிரமணியம் துவக்கி வைத்தார். பேராசிரியை ஆனந்தவல்லி வரவேற்றார். துணை முதல்வர் கோபிநாத், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலத் துணைத் தலைவர் பாலகிருஷ்ணன், சிவகங்கை மாவட்டத் தலைவர் விஞ்ஞானி ரகுபதி, தலைவர் சுந்தரம் பேசினர்.158 பள்ளிகளைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் முகாமில் பங்கேற்றனர். பேராசிரியர்கள் ஜான்பால், விஜய் ஆனந்த், கோபிநாத், கண்ணன், ராமச்சந்திரன், பாலசுந்தரம் ஆகியோர் பருவநிலை மாற்றம் மற்றும் அதன் தொடர்பான விளைவு குறித்த ஆராய்ச்சி முறைகளை பல்வேறு கோணங்களில் பயிற்சி அளித்தனர். பேராசிரியர் கார்த்திகேயன் நன்றி கூறினார். பேராசிரியர் சிவக்குமார் ஒருங்கிணைத்தார்.
