UPDATED : செப் 23, 2015 12:00 AM
ADDED : செப் 23, 2015 03:55 PM
காந்திகிராமம்
: காந்திகிராம பல்கலையில் வேலைவாய்ப்புதரும் 2 புதிய தொழிற்சார் பட்டப்படிப்புகள் துவங்கப்பட்டன.
பல்கலை துணைவேந்தர் நடராஜன் கூறியதாவது: காந்திகிராம பல்கலையில்
புதிதாக அறிவுசார் தொழில் மேம்பாட்டு மையம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த மையம்
மூலம் 2015-16 க்கு புதிதாக இளநிலை தொழிற்
பட்டப்படிப்புகள் துவங்கப்பட்டு உள்ளன. இதில் பண்ணை இயந்திரங்கள் இயக்குதல்
மற்றும் பராமரித்தல், காலணிகள் மற்றும் துணைப்பொருட்கள்
வடிவமைப்பு ஆகிய 2 பட்டப்படிப்புகள் உள்ளன. இந்த
படிப்புகள் பல்கலை மானியக்குழு நிதியுதவியில் துவங்கப்பட்டன. எளிதில் வேலைவாய்ப்பு
கிடைக்கும்.
இந்த படிப்பில் 6 மாதம், ஓராண்டு, 2 ஆண்டு, மூன்றாண்டு என, மாணவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப
படிக்கலாம். இதில் 60 சதவீதம் செயல்திறன் பயிற்சி,
40 சதவீதம் விளக்க பாடங்கள் இருக்கும். இதில் சேர
பிளஸ் 2 அல்லது அதற்கு இணையான கல்வி தகுதியை
பெற்றிருக்க வேண்டும். www.ruraluniv.ac.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம், என்றார்.
