Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பன்னாட்டு புத்தக கண்காட்சி முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

பன்னாட்டு புத்தக கண்காட்சி முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

பன்னாட்டு புத்தக கண்காட்சி முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

பன்னாட்டு புத்தக கண்காட்சி முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

UPDATED : ஜன 18, 2024 12:00 AMADDED : ஜன 18, 2024 09:46 AM


Google News
Latest Tamil News
சென்னை: அரசு முன்னெடுக்கும் சென்னை பன்னாட்டு புத்தக கண்காட்சியில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:தமிழகத்தில் அரசு முன்னெடுக்கும் அறிவு இயக்கத்திற்கு அத்தாட்சியாக, கடந்தாண்டு முதல் சென்னை பன்னாட்டு புத்தக காட்சியை நடத்திவருகிறோம். நடப்பாண்டு, 40 நாடுகள், 10 மாநிலங்களின் பங்கேற்புடன், 50 மொழிகளை சேர்ந்த பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ளும் புத்தக காட்சி, 18ம் தேதி வரை, சென்னை நந்தம்பாக்கம் வர்த்த மையத்தில் நடக்கிறது.தொழிற்கல்வி சார்ந்த, 200 நுால்கள், தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட உள்ளன. பல்வேறு கருத்தரங்குகள், விவாதங்கள் நடைபெறுகின்றன. எழுத்தாளர்களுக்கும், வெளிநாட்டு பதிப்பு நிறுவனங்களுக்கும் இடையே பாலமாக, 20 இலக்கிய முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.தமிழ் படைப்பாளர்கள் உலகெங்கும் சென்று சேரவும், உலக மொழிகளில் உள்ள அறிவு செல்வத்தை தமிழில் ஆக்கி அளிக்கவும், பெரும் பொருட்செலவில், நம் அரசு முன்னெடுக்கும், இந்த உலக அளவிலான அறிவு திருவிழாவில் அனைவரும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






      Our Apps Available On




      Dinamalar

      Follow us