Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மதுரை பூரணத்திற்கு முதல்வர் சிறப்பு விருது

மதுரை பூரணத்திற்கு முதல்வர் சிறப்பு விருது

மதுரை பூரணத்திற்கு முதல்வர் சிறப்பு விருது

மதுரை பூரணத்திற்கு முதல்வர் சிறப்பு விருது

UPDATED : ஜன 27, 2024 12:00 AMADDED : ஜன 27, 2024 03:27 PM


Google News
சென்னை: பள்ளிக்கு நிலம் வழங்கிய, ஆயி அம்மாளுக்கு, முதல்வர் சிறப்பு விருது வழங்கப்பட்டது.மதுரை யா.கொடிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ஆயி அம்மாள் என்கிற பூரணம். மதுரை தல்லாக்குளம் கிளை கனரா வங்கியில், எழுத்தராக பணிபுரிகிறார். இவர் தான் படித்த, யா.கொடிக்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு கட்டடங்கள் கட்டுவதற்காக, தன் மகள் ஜனனி நினைவாக, 1.52 ஏக்கர் நிலத்தை வழங்கி உள்ளார்.தன் சொத்துக்களை, கல்வி கற்கும் மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கி உதவி செய்து வருகிறார். அவரது தன்னலமற்ற கொடை உள்ளத்தை பாராட்டி, நேற்று குடியரசு தின விழாவில், முதல்வர் ஸ்டாலின், முதல்வரின் சிறப்பு விருது வழங்கி கவுரவித்தார்.விருது குறித்து ஆயி அம்மாள் கூறுகையில், முதல்வரிடம் விருது பெற்ற நேரத்தில், நான் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே கிடையாது. நன்றி சொல்ல வார்த்தை வரவில்லை. ஆனந்த கண்ணீர் தான் வந்தது. கல்வி வளர்ச்சிக்காக, என் மகள் எண்ணம் நிறைவேறுவதற்காக, நான் நிலம் அளித்த செய்தி, உலக அளவில் பேசப்படுவது மகிழ்ச்சியாக உள்ளது, என்றார்.






      Our Apps Available On




      Dinamalar

      Follow us