Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2 துணைத்தேர்வு முடிவு நாளை மதியம் வெளியாகிறது

பிளஸ் 2 துணைத்தேர்வு முடிவு நாளை மதியம் வெளியாகிறது

பிளஸ் 2 துணைத்தேர்வு முடிவு நாளை மதியம் வெளியாகிறது

பிளஸ் 2 துணைத்தேர்வு முடிவு நாளை மதியம் வெளியாகிறது

UPDATED : ஜூலை 25, 2024 12:00 AMADDED : ஜூலை 25, 2024 09:52 AM


Google News
Latest Tamil News
திருப்பூர்: பிளஸ் 2 துணைத்தேர்வு முடிவுகள் நாளை (26ம் தேதி) மதியம் வெளியாகிறது. தேர்ச்சி பெறும் மாணவர் கல்லுாரியில் இணைய வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

கடந்த மே, 6ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகியது. மாவட்டத்தில் தேர்வெழுதிய, 23 ஆயிரத்து, 849 பேரில், 23 ஆயிரத்து, 242 பேர் தேர்ச்சி பெற்றனர்; 97.45 சதவீதத்துடன் திருப்பூர் மாவட்டம் மாநிலத்தில் முதலிடம் பெற்று பாராட்டு பெற்றது. அசத்தியது. பொதுத்தேர்வில் தோல்வியை தழுவி, தனித்தேர்வர் உட்பட, 986 பேருக்கு, ஜூன், 24 முதல், ஜூலை, 2 வரை துணைத்தேர்வு நடத்தப்பட்டது.

மாவட்டத்தில், 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, தேர்வெழுதினர். இந்நிலையில், பிளஸ் 2 துணைத்தேர்வு முடிவுகள் நாளை (26 ம் தேதி) மதியம், 2:00 மணிக்கு வெளியிடப்படும். www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் ரிசல்ட் பக்கத்தில் விவரங்களை அறியலாம். வரும், 29 மற்றும், 30ம் தேதி, தேவையிருப்பின் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு தேர்வுள் துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us