சுற்றுச்சூழல் என்பது... மரத்தை மட்டுமே சார்ந்தது அல்ல!
சுற்றுச்சூழல் என்பது... மரத்தை மட்டுமே சார்ந்தது அல்ல!
சுற்றுச்சூழல் என்பது... மரத்தை மட்டுமே சார்ந்தது அல்ல!

பழமையான மரங்கள்
ஊட்டி, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில், 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட மரங்கள் உள்ளன. சூழலைக் கடந்து இவை எவ்வாறு இவ்வளவு ஆண்டு காலங்கள் வாழ்கின்றன என்பது குறித்து ஆராய வேண்டும். வனப்பகுதிகளில், வெளிநாட்டு தாவரங்கள், மரங்கள் வளர்வதும், பரவுவதும் ஆபத்தானது.
நெகிழியால் பேராபத்து
பெட்ரோலியம் சார்ந்த பொருட்களால் காற்று மாசு அதிகரிக்கிறது. இதற்கு அடுத்ததாக, நெகிழிப் பயன்பாடு உலகளவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. வளர்ச்சி பெற்ற நாடுகளும் கூட நெகிழி பயன்பாட்டை தவிர்க்க மறுக்கின்றன. மரம் சார்ந்த பயன்பாடுகள் இருந்தபோது மாசு குறைவாக இருந்தது. ஆனால், இன்று நெகிழி பயன்பாடு கடல் வரை பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
காலநிலை மாற்றம் கண்கூடு
உலக நாடுகள் அனைத்தும், காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதிப்பு, காற்று மாசு உள்ளிட்டவற்றில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. ஒவ்வொரு நாடுகளும் இதில் பல்வேறு கொள்கைகளை கடைபிடித்து வருகின்றன. நாட்டு மரங்கள், தாவரங்களை பாதுகாப்பதில், அந்தந்த நாடுகள் எந்தச் சூழலிலும் பாரபட்சம் காட்டக்கூடாது. நாட்டு மரங்கள், தாவரங்களைப் பாதுகாக்காததன் விளைவு, காலநிலை மாற்றத்தால் தவிக்கிறோம்.
பாதை மாறக்கூடாது
இன்று, குழந்தைகள் அனைவரிடமும் விழிப்புணர்வு உள்ளது. அதேசமயம், சமுதாயத்தின் பிடியில் இருந்து வெளிவர மறுக்கின்றனர். பள்ளிப் பருவம் முதல் குழந்தைகளுக்கு சுற்றுச்சூழல் குறித்து கற்றுத் தரப்படுகிறது. ஆனால், பின்னாளில் இந்த சமூகம் அவர்களின் பாதையை மாற்றி விடுகிறது.


