ஜி.டி.நாயுடு மேம்பாலம்: கடந்து வந்த பாதை
ஜி.டி.நாயுடு மேம்பாலம்: கடந்து வந்த பாதை
ஜி.டி.நாயுடு மேம்பாலம்: கடந்து வந்த பாதை

10 சந்திப்புகள், 16 சிக்னல்கள்
உப்பிலிபாளையத்தில் இருந்து நீலாம்பூர் வரை 10 சாலை சந்திப்புகள், 16 சிக்னல்கள் உள்ளன. வாகன பெருக்கம் அதிகரித்ததால், இந்த துாரத்தை கடக்க, 45 நிமிடத்துக்கு மேல் தேவைப்பட்டது. இதை தவிர்க்க, மேம்பாலம் அமைக்க அ.தி.மு.க அரசு முடிவு எடுத்தது. 2016 ஆகஸ்ட் 4ல் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ரூ.1,791 கோடி ஒதுக்கீடு
முதல்வர் பழனிசாமி ஆட்சியில், உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை மேம்பாலம் கட்ட ரூ.1621 கோடி ஒதுக்கப்பட்டது. 2020 மார்ச் 24ல் நிர்வாக ஒப்புதல் தரப்பட்டது. ஹைதராபாத் நிறுவனமான கே.என்.ஆர். கன்ஸ்ட்ரகஷனஸ், 2020 ஆகஸ்ட் 29ல் வேலை தொடங்கியது. 48 மாதங்களில் கட்டுமானம் முடிக்க வேண்டும் என்பது நிபந்தனை.
2021ல் ஆட்சி மாறியது.
முதல்வர் ஸ்டாலின் கூடுதல் தேவைகளுக்கு ஒப்புதல் அளித்து, திட்ட செலவையும் ரூ.1791.23 கோடியாக அதிகரித்தார்.
4 ஏறுதளம், இறங்கு தளம்
4வழி பாதையான இந்த மேம்பாலத்தில், அண்ணாதுரை சிலை, நவ இந்தியா, ஹோப் காலேஜ், விமான நிலையம் ஆகிய நான்கு இடங்களில் ஏறுதளங்கள் மற்றும் இறங்குதளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாலத்தின் மத்தியில், 4 அடி அகலத்துக்கு சென்டர் மீடியன் எனும் சாலை தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.
ரோலர்கள் அமைப்பு
பாளம் பாளமாக பொருத்தப்படும் மேம்பாலங்களில் 40, 50 மீட்டருக்கு ஒரு இடைவெளி இருப்பதால், வாகனங்கள் கடக்கும்போது தடக் தடக் என்ற சத்தம் எழுவது உண்டு. இந்த பாலத்தில், சைனஸ் பிளேட் விரிவு இணைப்பு என்ற புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, அந்த இடங்களை கடக்கும்போது எழும் ஒலியின் அளவும், அதிர்வும் குறைவாக இருக்கும்.
மழை நீர் வடிகால்
மழை பெய்யும்போது பாலத்தின் மீது விழும் மழை நீர், குழாய் வழியாக வடிந்து, கீழே அமைக்கப்பட்டுள்ள 220 ஆழ்துளைகள் வாயிலாக பூமிக்குள் செல்லும் வகையில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தி உள்ளனர். ஒன்றரை மீட்டர் அகல நடைமேடையுடன் கூடிய வடிகால் அமைப்பு, 13 ஆயிரத்து 560 மீட்டர் நீளத்துக்கு திட்டமிட்டனர்; 9115 மீட்டர் நீளத்துக்கு அமைத்துள்ளனர்.


