அ.தி.மு.க., - பா,ஜ., ஆட்டத்தில் த.வெ.க., சிக்குமா; தப்புமா?
அ.தி.மு.க., - பா,ஜ., ஆட்டத்தில் த.வெ.க., சிக்குமா; தப்புமா?
அ.தி.மு.க., - பா,ஜ., ஆட்டத்தில் த.வெ.க., சிக்குமா; தப்புமா?

திணறல்
கரூர் சம்பவத்திற்கு பின் ஒரு வார காலத்துக்கு மேலாக வெளியே தலைகாட்டாமல் இருந்த த.வெ.க., தலைவர் விஜய், சமீபத்தில் தான் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம், மொபைல் போனில் பேசி ஆறுதல் கூறினார். இந்த சம்பவத்திற்கு பின் கட்சிக்குள்ளும், பொது வெளியிலும் ஏற்பட்ட நெருக்கடிகளை சமாளிக்க முடியாமல் விஜய் திணறி வந்தார்.
இதுகுறித்து, பா.ஜ., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
பா.ஜ.,வை கொள்கை எதிரி என கடுமையாக விமர்சித்த விஜய், தற் போது அமைதியாக இருக்கி றார். சிவகங்கையில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கில், சி.பி.ஐ., விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரைத்ததை எதிர்த்த விஜய், கரூர் சம்பவத்துக்கு மட்டும் சி.பி.ஐ., விசாரணை வேண்டும் என்றார்.
ஆட்டம் ஆரம்பம்
தேர்தல் கமிஷனில் நிலுவையில் இருந்த, இரட்டை இலை வழக்கை பயன்படுத்தி, அ.தி.மு.க.,வை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது போல, கரூர் விவகாரத்தை சி.பி.ஐ.,க்கு மாற்றி, விஜயையும் தன் கட்டுப்பாட்டில் வைக்க, பா.ஜ., திட்டமிட்டு, தன் ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது.


