/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அமுதசுரபி ஊழியர் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை அமுதசுரபி ஊழியர் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை
அமுதசுரபி ஊழியர் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை
அமுதசுரபி ஊழியர் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை
அமுதசுரபி ஊழியர் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை
ADDED : ஜூன் 28, 2024 06:31 AM

புதுச்சேரி: கருணை அடிப்படையில் அமுதசுரபி கூட்டுறவு பண்டகசாலை ஊழியர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்கப்பட்டது.
புதுச்சேரி, அமுதசுரபி கூட்டுறவு பண்டகசாலையில் பணியின் போது உயிரிழந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில், வேலை வழங்க முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டார்.
அதனடிப்படையில், 6 ஊழியர்களின் வாரிசு தாரர்களுக்கு தினக்கூலி ஊழியர்களாக பணி நியமனம் செய்யப்பட்டதற்கான ஆணையினை சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி வழங்கினார். நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமுதசுரபி நிர்வாகி இந்திரமோகன், மேலாண் இயக்குனர் அய்யப்பன், மேலாளர் சுரேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.